இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புரசைவாக்கம் கிளையில் நடந்த 88வது நிறுவன தினம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புரசைவாக்கம் கிளையில் நடந்த 88வது நிறுவன தினம்

சென்னை :  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரசைவாக்கம் கிளை அதன் 88வது நிறுவன தினத்தை 10-02-2024 அன்று கொண்டாடியது இந்நிகழ்வில், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ திரு.ஐ.பரந்தாமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்வின் சிறப்பாக,  மாற்றுத்திறனாளிகளுக்கு முச்சக்கரவண்டிகளை வழங்கி இந்நாளினை மறக்கமுடியாத தருணமாக மாற்றினார். அதோடு,  சிறப்புமிக்க வகையில் ரூ. 235650/- அதன் ஊழியர்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்யப்பட்டது. தவிர, நிகழ்வின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இறுதியாக, வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு திரு. தாவேந்தர் குமார், முதன்மை மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை-1 மண்டலம் பாராட்டினைத் தெரிவித்தார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவன தினத்தை புரசைவாக்கம் கிளை ஆனது மிகவும் விமரிசையாக கொண்டாடியது.